கருணாநிதி மறைவுக்கு மதுரை கூடல் நகர் வர்த்தக சங்கம் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து, மதுரை கூடல் நகர் வர்த்தக சங்கம் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. #RIPKarunanidhi
கருணாநிதி மறைவுக்கு மதுரை கூடல் நகர் வர்த்தக சங்கம் அஞ்சலி
Published on

சென்னை:

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

இதேபோல் தமிழகம் முழுவதிலும் தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கருணாநிதியின் புகைப்படங்கள், பேனர்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

அவ்வகையில் மதுரை கூடல் நகர் வர்த்தக சங்கம் சார்பில் கருணாநிதிக்கு கண்ணீரஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத் தலைவர் இரா.கண்ணன் தலைமையில் சங்க செயலாளர் எட்வின் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi

X

Maalai Malar
www.maalaimalar.com