அதிமுக ஆட்சியை இனி யாராலும் கவிழ்க்க முடியாது- மதுசூதனன்

இனி யாராலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது என அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். #MLAsDisqualificationCase #TTVDhinakaran #madhusudanan
அதிமுக ஆட்சியை இனி யாராலும் கவிழ்க்க முடியாது- மதுசூதனன்
Published on

ராயபுரம்:

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மம் வென்றது. நீதி வென்றது. மீண்டும் எம்.ஜி.ஆர். வென்றார். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. ஜெயலலிதாவால் காக்கப்பட்ட கட்சி. இனி யாராலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. சசிகலாவும், தினகரனும் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர்கள் ஆட்சியை கவிழ்க்க நினைப்பது அபத்தமானது.

இவ்வாறு அவர் கூறினார். #MLAsDisqualificationCase #TTVDhinakaran #madhusudanan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com