பெண்ணாடம் அருகே வீடு மீது மோதி கவிழ்ந்த லாரி- கட்டிட தொழிலாளி பலி

பெண்ணாடம் அருகே தனது வீட்டு முன்பு செல்போனில் பேசிக்கொண்டிருந்த கட்டிட தொழிலாளி மீது லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டின் சுவரில் மோதி நிற்கும் லாரி.
வீட்டின் சுவரில் மோதி நிற்கும் லாரி.
Published on

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் கொத்தட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், கட்டிட தொழிலாளி.

இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அரியலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றிய லாரி சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடியது.

பின்னர் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து கோபாலகிருஷ்ணனின் வீட்டின் மீது மோதி நின்றது. அப்போது போனில் பேசிக் கொண்டிருந்த கோபால கிருஷ்ணன் லாரியின் அடியில் சிக்கினார். அவர் உயிர் பிழைக்க கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த லாரி டிரைவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இடிபாடுகளுக்குள் சிக்கிய கோபாலகிருஷ்ணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரியை கிரேன் மூலம் மீட்டு பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரை வரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com