ஈரோட்டில் கணவர் கண்முன் மனைவி லாரி மோதி பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவர் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோட்டில் கணவர் கண்முன் மனைவி லாரி மோதி பலி
Published on

ஈரோடு

நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை, கே.கே.பி.வீதியை சேர்ந்தவர் இளங்கோ(வயது40). இவரது மனைவி பூவிழி என்கிற தேவி(32).

சம்பவத்தன்று இளங்கோ தனது மனைவியுடன் தனது மோட்டார்சைக்கிளில் ஈரோட்டிற்கு வந்து கொண்டிருந்தார். ஈரோடு மேட்டூர் ரோட்டில் வந்த போது ஒரு வளைவில் திரும்பிய போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத வகையில் இளங்கோ வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் வண்டி நிலை தடுமாறி பின்னால் உட்கார்ந்து வந்த தேவி ரோட்டில் விழுந்தார். அப்போது லாரியின் பின் பக்க சக்கரம் தேவி மீது ஏறி இறங்கியது.

இதில் பலத்த காயம் அடைந்த தேவியை அருகில் இருந்தவர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்கைக்காக கொண்டு சென்றனர். தேவியை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த விபத்தில் இளங்கோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தன் கண் முன்னே மனைவி இறந்து போனதை ஜீரணிக்க முடியாமல் இளங்கோ கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com