தஞ்சை அருகே லாரி மோதி காவலாளி பலி

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை அருகே லாரி மோதி காவலாளி பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த வல்லம் ஸ்ரீஅம்மன் நகரை சேர்ந்தவர் சமுத்திரராஜன் (வயது55 ). இவர் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் எதிரே வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சமுத்திரராஜன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் வினோத்குமார் வல்லம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com