வாலாஜா அருகே லாரி மோதி கட்டிட மேஸ்திரி பலி

வாலாஜாவில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

வாலாஜா:

அம்மூர் அடுத்த கல்புதூர் பெரிய தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சங்கர் (வயது 18). கட்டிட மேஸ்திரி. நேற்று மாலை ஆற்காடு அருகே உள்ள ஒரு ஊரில் கட்டிட வேலை முடித்து கல்புதூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

ராணிப்பேட்டை- சோளிங்கர் சாலையில் சென்றபோது முன்னாள் சென்ற லாரி திடீரென வலது பக்கம் திரும்பியது. இதனால் லாரியின் பின்னால் சென்ற சங்கரின் பைக் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சங்கரின் சகோதரி சவுந்தர்யா ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com