எதிர்க்கட்சிகள் மக்களிடம் பீதியை பரப்புகின்றனர்- மோடி கடும் தாக்கு

ஊழல் செய்ய முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் மக்களிடம் பீதியை பரப்புவதாக பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #BJP #PMModi
எதிர்க்கட்சிகள் மக்களிடம் பீதியை பரப்புகின்றனர்- மோடி கடும் தாக்கு
Published on

பாட்னா:

பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் பகல்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனியும் சிலரால் ஊழல்செய்ய முடியாது. வாரிசு அரசியலுக்கு முடிவுக்கு வந்து விடும். இதனால் அச்சம் ஏற்பட்டுள்ள அவர்கள் மக்களிடம் பீதியை பரப்புகின்றனர்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்காது. அனைத்து அரசியல் சாசன அமைப்புகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும். இட ஒதுக்கீடு இனி இருக்காது என்றெல்லாம் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

நான் மக்களின் காவலன். அம்பேத்கார் கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறையை நான் மேலும் வலுப்படுத்தி காப்பாற்றுவேன்.

நமது பாதுகாப்பு படையினருக்குள்ள அதிகாரத்தை பறித்து விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ஆனால் பாரதிய ஜனதா அரசு நக்சலைட்டுகள், பயங்கரவாதிகளை ஒடுக்க அனைத்து அதிகாரங்களையும் பாதுகாப்பு படைக்கு வழங்கி உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #BJP #PMModi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com