சிவகங்கையில் பிற்பட்டோர் தொழில் தொடங்க கடனுதவி

சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்டோர் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் மலர்விழி தகவல் தெரிவித்தார்.
சிவகங்கையில் பிற்பட்டோர் தொழில் தொடங்க கடனுதவி
Published on

சிவகங்கை:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், (டாப்செட்கோ), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இனத்தவர்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் வகையில் தொழில் செய்திட பல்வேறு திட்டங்களின் கீழ் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது.

கடன் உதவி பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98,000/- மற்றும் ரூ.1,20, 000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப் படிவம் பெற மற்றும் கடன் திட்டங்கள் குறித்த விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்:-

சென்னை அண்ணா சாலையில் உள்ள டாப் செட்கோவின் தலைமை அலுவலகம்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (மண்டல மேலாளர், டாப்செட்கோ)

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்.

சிவங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்.

மேற்கண்ட தகவலை சிவகங்கை கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com