

இந்திய அணி கேப்டன் விராட் கோலி 593 ரன்கள் குவித்த போதிலும், கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படவில்லை என்று விமர்சனம் இருந்து வருகிறது. முக்கியமான கட்டத்தில் அவரால் சிறந்த முடிவை எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலி இன்றும் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.