

பெய்ஜிங்:
சீனாவின் காங்சூ பகுதியை சேர்ந்தவர் கயோ செங் யாங் (54). இவர் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்தார். இவர் 11 பெண்களை கற்பழித்து கொலை செய்தார்.
அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக சிதைத்தார். கொலை செய்யப்பட்டவர்களில் ஒரு சிறுமியும் அடங்குவார். இக்கொலை சம்பவங்கள் கடந்த 1988 முதல் 2002-ம் ஆண்டு வரை நடந்தது.
சிவப்பு நிற ஆடை அணிந்த பெண்களை பின் தொடர்ந்து இப்படுகொலையை அவர் நிகழ்த்தினார். இவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. #DeathPenalty