கேளம்பாக்கம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

கேளம்பாக்கம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

திருப்போரூர்:

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பெரிய பிள்ளேரி துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 21). கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இவர் தனது நண்பர்கள் வெங்கடேசன், அஜித் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று பானிபூரி வாங்கிக்கொண்டு பெரிய பிள்ளேரி ஏரிக்கரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் ஹரிசை சரமாரியாக வெட்டி கொன்றனர்.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கொலையாளிகளை பிடிக்க கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கஞ்சா விற்கும் மோதலில் ஏற்பட்ட தகராறில் ஹரிஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் ஜோதி நகரை சேர்ந்த பச்சை என்ற தமிழ்மாறன் (21), சக்தி (20), தீபக் (20), சாகுல் அமீது (20), ஆட்டோ வினோத் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com