ரபேல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி பாராளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் - கெஜ்ரிவால்

ரபேல் விவகாரம் குறித்து விவாதிக்க்க பாராளுமன்றத்தில் சிறப்பு அமர்வை கூட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #RafaleDeal #Modi #ArvindKejriwal
ரபேல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி பாராளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் - கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி:

பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. 

இந்திய அரசால் கைகாட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவுசெய்ய எதுவுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.  

இந்நிலையில், ரபேல் விவகாரம் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ரபேல் விவகாரத்தில் உண்மை நிலை குறித்து அறிய பிரதமர் மொடி பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #RafaleDeal #Modi #ArvindKejriwal

X

Maalai Malar
www.maalaimalar.com