கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் கோர்ட்டில் தாக்கல்

அவதூறு வழக்கை முடித்து வைப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. #Karunanidhideathcertificate #Karunanidhi
கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் கோர்ட்டில் தாக்கல்
Published on

முரசொலி பத்திரிகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி கடந்த 2015-ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார்.

4 ஆண்டு ஆட்சியில் ஜெயலலிதா சாதித்தது என்ன? என்ற தலைப்பில் எழுதிய அந்த கட்டுரையில் ஜெயலலிதா குறித்து சில விமர்சனங்களை செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது ஜெயலலிதா சென்னை மாவட்ட கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதுபோல கருணாநிதி மீது ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு முதல் 13 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி கருணாநிதி மரணமடைந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com