கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி போட்டி

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள இரு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவி அனிதா ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார். #Anitakumaraswamy
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி போட்டி
Published on

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள இரு சட்டசபை தொகுதிகளில்  நடைபெறும் இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவி அனிதா ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான எடியூரப்பா, பல்லாரி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ஸ்ரீராமுலு, மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.யான புட்டராஜு ஆகியோர் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதைதொடர்ந்து, தங்களது எம்.பி. பதவிகளை அவர்கள் மூவரும் ராஜினாமா செய்தனர். இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா தொகுதி எம்.எல்.ஏ.வாக நீடிக்கப் போவதாக அறிவித்தார். இதனால், அவர் வெற்றிபெற்ற மற்றொரு தொகுதியான ராமநகரா சட்டசபை உறுப்பினருக்கான இருக்கை காலியாக உள்ளது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா இறந்ததால் ஜம்கன்டி சட்டசபை உறுப்பினருக்கான இருக்கையும் காலியாக உள்ளது.

பாராளுமன்ற இடைத்தேர்தலுடன் இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர்  3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் வெளியாகும்.


இந்நிலையில், ராமநகரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவியும், சினிமா நடிகையுமான அனிதா இன்று அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com