குடகு மாவட்டத்திற்கு மத்திய அரசு ரூ.100 கோடி வெள்ள நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் - குமாரசாமி கோரிக்கை

குடகு மாவட்டத்திற்கு மத்திய அரசு ரூ.100 கோடி வெள்ள நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் - குமாரசாமி கோரிக்கை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு மத்திய அரசு ரூ.100 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #KodaguRain #KarnatakaCM
Published on

கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கேரள மாநிலத்திற்கு நிவாரண உதவியாக ரூ.500 கோடி வழங்குவதாக பிரதமர் அறிவித்திருந்தார். அதே போல் கர்நாடக மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு குறைந்தது ரூ.100 கோடி வழங்குவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்காக நாங்கள் மத்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். வெள்ளத்தால் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும். நாங்கள் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியை பெற்று வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com