நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமனம்

டெல்லி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமனம்
Published on

புதுடெல்லி:

டெல்லி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த 11ம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்ரு வெளியிட்டார்.

இதையடுத்து, மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் விரைவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com