

சென்னை:
ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் தனியார் சொத்துக்கள் எனவும், அதை யாரும் கைப்பற்ற முடியாது என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ விவேக்
ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜெயா. டி.வி. ஆகியவற்றை கைப்பற்றுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜெயா டி.வி. சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், நமது எம்.ஜி.ஆர்.
நாளிதழ், ஜெயா. டி.வி. தனியார் சொத்து. அதனை யாரும் கைப்பற்ற முடியாது.பொய் வழக்குகளை ஜோடித்து எங்களை வீழ்த்த நினைத்தால் அதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.