அப்பல்லோவில் ஜெ. சேர்க்கப்பட்ட மறுநாள் அவரிடம் சமையலர் பேசியதாக தகவல்

அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட மறுநாள் அவரை சந்தித்து பேசியதாக சமையலர் ராஜம்மாள் விசாரணை ஆணையத்தில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JayaDeath
அப்பல்லோவில் ஜெ. சேர்க்கப்பட்ட மறுநாள் அவரிடம் சமையலர் பேசியதாக தகவல்
Published on

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்வர் உடல்நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் இன்று ஆஜரானார்.

விசாரணையின் போது, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் (செப்.23) ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்ததாக ராஜம்மாள் கூறியதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், அவரது மரணம் குறித்த விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #JayaDeath #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com