

இதனால் ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலி பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். ஆகவே, இவரால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
பறவைகள் சீசனுக்கு வந்து செல்வது போன்று அவ்வப்போது கிரிக்கெட்டில் தென்படுவார். இதனால் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
ஆஷஸ் தொடரில் விளையாடிய பட்டின்சன் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் இடம் பிடித்திருந்தார். மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
அடுத்த வருடம் கோடைக்காலத்தில் இந்தியா ஆஸ்திரேலியா செல்கிறது. கடந்த முறை இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அப்போது ஆஸ்திரேலியா முழு வலிமையான அணியாக இல்லை.
தற்போது ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருடன் வலிமையான அணியாக திகழ்கிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை தக்க வைத்துக் கொண்ட ஆஸ்திரேலியா பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை வென்றுள்ளது.
அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தொடர் இந்தியாவுக்கு எளிதானதாக இருக்காது. தொடரை கைப்பற்ற இந்தியா கடுமையாக போராட வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக எனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் சவால் விட்டுள்ளார்.