பாஜக அரசு வீழ்வது உறுதி - வாக்களித்த பின்னர் பிரியங்கா காந்தி பேட்டி

மக்களின் ஆத்திரம் ஓட்டுகளாக மாறி விழுந்து கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் பா.ஜ.க. அரசு வீழ்வது உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அரசு வீழ்வது உறுதி - வாக்களித்த பின்னர் பிரியங்கா காந்தி பேட்டி
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு  நடைபெற்றுவரும் ஆறாம்கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் டெல்லி லோடி எஸ்டேட் பகுதியில் உள்ள சர்தார் பட்டேல் வித்யாலயாவில் தனது வாக்குரிமையை இன்று நிலைநாட்டினார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி, ‘உண்மையான விவகாரங்களை பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு பிரதமர் மோடி தேவையில்லாத கதைகளை கூறி வருவதால் மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த வேதனையும் ஆவேசமும் கொண்டுள்ளனர். 

இப்போது அவர்கள் தங்களது ஆத்திரத்தை ஓட்டுகளாக பதிவு செய்து கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் பா.ஜ.க. அரசு வீழ்வது உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com