ஈரோட்டில் இன்று 5-வது நாளாக இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 5-வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஈரோடு:

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் முஸ்லிம்கள் குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதை தொடர்ந்து ஈரோடு செல்ல பாட்ஷா வீதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென சாலையில் அமர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோ‘ம் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐந்தாவது நாளாக பல்வேறு முஸ்லிம் கட்சியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

போராட்டம் தீவிரமடைந்து வருவதால் இஸ்லாமிய பெண்கள் காலை முதல் இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆண்கள் அங்கேயே தங்கி நள்ளிரவிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் முஸ்லிம் பெண்கள் குழந்தைகளுடன் அதிக அளவில் கலந்து கொண்டு தேசியக்கொடியை கையில் பிடித்தவாறு மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போராட்டம் நடைபெறும் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com