கிறிஸ் கெய்ல்-ஐ தன் வசமாக்கினார் பிரீத்தி ஜிந்தா

ஐபிஎல் ஏலத்தில் இரண்டு முறை யாரும் ஏலம் கேட்காத நிலையில், 3-வது முறையாக பஞ்சாப் கிங்ஸ் லெவன் கிறிஸ் கெய்ல்-ஐ தன்வசமாக்கியது. #iplauction #gayle #KXIP
கிறிஸ் கெய்ல்-ஐ தன் வசமாக்கினார் பிரீத்தி ஜிந்தா
Published on

பேட்ஸ்மேன்கள் வரிசையில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களும், அதிக சிக்சர்களும், அதிக சதங்களும் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேனும், சிக்சர் மன்னன் என்று அழைக்கப்படுபவரும் ஆன கிறிஸ் கெய்லின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட காலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்த கிறிஸ் கெய்லை, அந்த அணி தக்க வைக்கவில்லை. விராட் கோலி, டி வில்லியர்ஸ், சர்பராஸ் கான் ஆகியோரை தக்க வைத்திருந்தது.

நேற்றைய முதல் நாள் முக்கியமான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற அவரை எந்த அணி உரிமையாளர்களும் எடுக்கவில்லை. இரண்டு மூன்று சுற்றுகள் வந்த போதிலும் அவரை யாரும் எடுக்கவில்லை. இன்றைய 2-வது நாளில் ஏலம் முடிவடைவதற்கு முன் மீண்டும் ஒருமுறை ஏலத்திற்கு வந்தார்.

அப்போது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கிறிஸ் கெய்லை ஏலம் எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் சீசன் 2018-ல் கிறிஸ் கெய்ல் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com