

இவரை ஏலம் எடுப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் 8 கோடி, 9 கோடி ரூபாயைத் தாண்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் 10 கோடியையும் தாண்டினார். சென்னை அணி 10.5 கோடி ரூபாய் வரை போட்டியிட்டது.
அதையும் தாண்டி பஞ்சாப் 11 கோடி ரூபாய்க்கு கேட்டது. அதற்கு மேல் போட்டி போட சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்பவில்லை. இதனால் பங்சாப் அணி 11 கோடி ரூபாய்க்கு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் 11.5 கோடி ரூபாய்க்கு விருப்பம் தெரிவித்தது. இதனால் பஞ்சாப் அணி அதிர்ச்சி அடைந்ததோடு, அதற்கு மேல் கேட்க விரும்பவில்லை.