31-ந்தேதி ராஜஸ்தானுடன் மோதல்: சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை

சேப்பாக்கத்தில் 31-ந்தேதி நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். #IPL2019 #CSK #CSKvRR
31-ந்தேதி ராஜஸ்தானுடன் மோதல்: சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை
Published on

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் 7 ‘லீக்’ ஆட்டங்கள் நடக்கிறது.

கடந்த 23-ந்தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு 2-வது ஆட்டம் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகின்றனர்.

டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். அவர்கள் நீண்ட கியூவில் நின்று மிகவும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கினார்கள். குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆகும். இந்த விலையிலான டிக்கெட்டுகள் வாங்குவதற்காகவே ரசிகர்கள் ஸ்டேடியம் முன்பு குவிந்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com