பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி - சுஷ்மா சுவராஜ்

டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன என குறிப்பிட்டார். #IAFAttack #LoC #SushmaSwaraj #AllPartyMeeting
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி - சுஷ்மா சுவராஜ்
Published on

புதுடெல்லி:

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. இதையடுத்து, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் விமானப்படைக்கு பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியது குறித்து விவாதிக்க வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அனைத்து கட்சி கூட்டத்தை இன்ரு கூட்டினார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்,

அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆதரவு எப்போதும் இருக்கும்; விமானப்படையின் நடவடிக்கையை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார். #IAFAttack #LoC #SushmaSwaraj #AllPartyMeeting

X

Maalai Malar
www.maalaimalar.com