ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருக்காரவாசலில் குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். #PRPandian
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் விவசாயிகள்- வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காவேரி விவசாய சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பிறகு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களுக்கு துளியும் பயன் இல்லாத இந்த திட்டத்தை வருகிற ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகின்ற பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருகாரவாசலில் விவசாயிகள், வர்த்தகர்கள், மீனவர்கள் அனைத்து கட்சியினருடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இதற்கு முன்பாக வருகின்ற 22-ந் தேதி விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்து இரு மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்யப்படும்.

மேலும் ஜனவரி 26-ந் தேதி நடைபெறும் கிராம சபா கூட்டங்களில் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ள கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #PRPandian

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com