

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த கே.சக்கரவர்த்தி. இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கோவாரண்டோ மனுவில், ‘10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று பல்கலைக்கழகம் மானிய குழு விதி உள்ளது. ஆனால், இந்த விதியை மீறி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தங்கசாமி உதவி பேராசிரியராக மட்டுமே பணியாற்றியுள்ளார். ஆனால், இணை பேராசிரியராக 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பதாக தங்கசாமி தன்னுடைய சுயவிவரக் குறிப்பில் தெரிவித்துள்ளார். எனவே துணை வேந்தராக பணியாற்ற தங்கசாமிக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.