பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பொமக்களிடம் கருத்து கேட்க அன்புமணிக்கு அனுமதி- ஐகோர்ட் உத்தரவு

பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க டாக்டர் அன்புமணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பொமக்களிடம் கருத்து கேட்க அன்புமணிக்கு அனுமதி- ஐகோர்ட் உத்தரவு
Published on

சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கான நில ஆர்ஜித பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்துவதற்கு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எதிர்ப்பையும் மீறி பல்வேறு பகுதிகளில் நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது.

இந்நிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவரும் தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை சந்தித்து அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். சில இடங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்ற நிலையில், தர்மபுரி தொகுதியில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com