கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க நீதிபதிகளை நியமித்தது ஐகோர்ட்

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. #CoOperativePolls #IrregularitiesInPolls
கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க நீதிபதிகளை நியமித்தது ஐகோர்ட்
Published on

சென்னை

தமிழகத்தில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கில் அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வந்த உயர்நீதிமன்றம், இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், ராமநாதன், வெங்கட்ராமன், ராஜசூர்யா ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 2 வாரங்களில் நீதிபதிகள் தலைமையிலான குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

“குழு அமைக்கப்பட்ட 7 நாட்களுக்குள் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த குழுக்களில் இணை பதிவாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களும் இடம்பெறவேண்டும். விசாரணையின் முடிவில் முறைகேடு கண்டறியப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய குழுவுக்கு அதிகாரம் உண்டு. வழக்கு தொடராத சங்கங்களுக்கு தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை. தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடலாம்’’ என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. #CoOperativePolls #IrregularitiesInPolls

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com