அமெரிக்கா: மருத்துவமனையில் துப்பாக்கி தூக்கிய டாக்டர் - ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை

அமெரிக்காவில் மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து ஒரு நோயாளியை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா: மருத்துவமனையில் துப்பாக்கி தூக்கிய டாக்டர் - ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை
Published on

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ப்ரோன்ஸ் லெபனான் மருத்துவமனைக்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த டாக்டர் ஒருவர் அங்கிருந்தவர்களை மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதனால், பதற்றமடைந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சிதறி ஓடி அங்கிருந்த அறைகளில் மறைந்து கொண்டனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த நகர போலீசார் மருத்துவமனையை சுற்றிவளைத்தனர். இதனையடுத்து, சிறிது நேரத்திற்கு உள்ளிருந்து சப்தம் எதும் கேட்காததால் சந்தேகமடைந்த போலீசார், உள்ளே அதிரடியாக புகுந்தனர். அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட டாக்டர் ஹென்ரி பெல்லோ, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு அங்கு பிணமாக கிடந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com