கும்மிடிப்பூண்டி அருகே எரிசாராயம் கடத்திய டேங்கர் லாரி சிக்கியது - டிரைவர்-கிளீனர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே எரிசாராயம் கடத்திய டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே எரிசாராயம் கடத்திய டேங்கர் லாரி சிக்கியது - டிரைவர்-கிளீனர் கைது
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் நாமக்கல் மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு செந்தில் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திராவில் இருந்து வந்த டேங்கர் லாரி ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். இந்த லாரியில் 25 லிட்டர் எரிசாராயம் ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு கடத்திச்செல்வது தெரியவந்தது.

லாரியில் இருந்த டிரைவரை முதலில் பிடித்த போலீசார், தப்பி ஓட முயன்ற கிளீனரையும் மடக்கி பிடித்தனர். எரிசாராயம் கடத்தி வந்த டேங்கர் லாரியை நாமக்கல் மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

டிரைவர், கிளீனர் ஆகியோரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com