கவுதமாலா எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது - உயிரிழப்பு 72 ஆக அதிகரிப்பு

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மீண்டும் வெடித்து சிதறியதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. #GuatemalaVolcano
கவுதமாலா எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது - உயிரிழப்பு 72 ஆக அதிகரிப்பு
Published on

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். எங்கு பார்த்தாலும் சாம்பல் புகை சூழ்ந்து காணப்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாம்பல் புகை பரவியது. கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com