கவர்னர் பன்வாரிலால் மீலாதுன் நபி வாழ்த்து

மீலாதுன் நபி விழாவை கொண்டாடும் மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை கவர்னர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். #MiladUnNabi
கவர்னர் பன்வாரிலால் மீலாதுன் நபி வாழ்த்து
Published on

சென்னை:

கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீலாதுன் நபி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

இறை தூதர் முகமது நபியின் பிறந்தநாள் மீலாதுன் நபி விழாவாக கொண்டாடப்படுகிறது. இறைதூதர் மனிதர்களின் மிக உயரிய பண்புகளான ஒழுக்கம், அன்பு, கருணை மற்றும் தர்ம சிந்தனையுடன் திகழ்ந்தார். மீலாதுன் நபி விழாவை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறை தூதரின் சிறந்த கொள்கைகளான அன்பு மற்றும் சகிப்பு தன்மையை வியாபித்து நமது வாழ்வை சமூகத்தில் மேம்படுத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MiladUnNabi #TNGovernor #BanwarilalPurohit

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com