

புதுடெல்லி:
மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலாக முகுல் ரோத்தகி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவருடைய 3 ஆண்டு பதவி காலம் நிறைவுபெறுவதை தொடர்ந்து மத்திய அரசு நேற்று அவரது பதவிகாலத்தை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இதேபோல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் பதவி காலமும் நீட்டிக்கப்பட்டது. மத்திய மந்திரி சபையின் பதவி நியமன குழு இந்த முடிவை எடுத்தது.