ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்ட ஜெர்மனி மந்திரி

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு உள்துறை மந்திரி தாமஸ் டி மைசியரே ஒப்பிட்டு பேசியுள்ளார்.
ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்ட ஜெர்மனி மந்திரி
Published on

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து ஹம்பர்க் நகரில் ஒன்று கூடி,“வெல்கம் டூ நரகம்” என்ற பதாகைகளை பிடித்து அனைத்து தலைவர்களுக்கும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி எச்சரித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்காததால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com