சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு - இன்று 4 பேர் பதவியேற்றனர்

சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 4 பேர் இன்று பதவியேற்றதால் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 34 ஆக உயர்ந்துள்ளது.
பதவியேற்ற புதிய நீதிபதிகள்
பதவியேற்ற புதிய நீதிபதிகள்
Published on

சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 60 ஆயிரம் வழக்குகள் தேங்கி கிடப்பதால் இவற்றை விரைவாக விசாரித்து முடிக்கும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடிக்கு பரிந்துரைத்தார்.

இதைதொடர்ந்து, நீதிபதிகளின் எண்ணிக்கையை முப்பதில் இருந்து முப்பத்துநான்காக அதிகரிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய பதவிகளுக்கான பெயர்களை சமீபத்தில் ‘கொலீஜியம்’ பரிந்துரைத்தது.

இந்நிலையில், நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, எஸ்.ரவிந்திர பட், வி.ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இவர்கள் நால்வருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com