பீகாரில் ரெயில் மோதி 4 பேர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்

பீகார் மாநிலத்தில் ரெயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
பீகாரில் ரெயில் மோதி 4 பேர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று காலை சிவான் மாவட்டத்தில் உள்ள கச்சர் ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தனர். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரெயில் அவர்கள் மீது மோதியது.

இதில், குழந்தை உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com