அபார மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அபார மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
Published on

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்துவரும் பாஜக கூட்டணி அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

இந்த வெற்றியை பாஜகவினர் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடிவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்பட உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com