டி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி
விராட் கோலி
Published on

டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இன்று அக்டோபர் 18-ந்தேதி என்பதால் சரியாக ஒரு வருடம் இருப்பதால், உலகக்கோப்பை குறித்து ஐசிசி-க்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டியளித்தார்.

அப்போது சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம் செலுத்த இருக்கிறோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை மீது நாங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்த இருக்கிறோம். அடுத்த 12 மாதங்கள் முடிந்த அளவிற்கு மிகப்பெரிய தொடருக்கான வீரர்களை தயார் செய்வது முக்கியமானது.

டி20 கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம் பெறும்போது, அவர்களுடைய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற வேண்டும் என்ற உத்வேகம் எங்கள் வீரர்களிடம் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது சரியாக அமைந்துள்ள காம்பினேசன் அணியுடன் செல்ல விரும்புகிறோம்.

அறிமுகம் செய்யப்பட்ட வருடத்தில் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. அப்போது டி20-யின் எதிர்காலம் எப்படி இருக்கும் என் சற்று தெரியாமல் இருந்தது. அதன்பின் மிகப்பெரிய கிரிக்கெட்டாக உருவெடுத்தது.

டி20 உலகக்கோப்பையை வென்ற 2-வது இந்திய கேப்டன் என்பது மிகப்பெரிய கவுரவமாக இருக்கும். அடுத்த வருடம் நடைபெறும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையையும் இந்தியா வெல்லும் என நம்புகிறேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com