காஷ்மீர் - நிலச்சரிவில் சிக்கிய வாகனங்களில் சென்ற 5 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட வாகனங்களில் சென்ற 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Kishtwarlandslide
காஷ்மீர் - நிலச்சரிவில் சிக்கிய வாகனங்களில் சென்ற 5 பேர் உயிரிழப்பு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள பட்டார் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்றுவரும் மச்சைல் யாத்திரையில் பங்கேற்பதற்காக இன்று பலர் டோடா-கிஷ்த்வார் சாலை வழியே வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, காலை 10.30 மணியளவில் குல்லிகாட் என்னும் இடத்தில் பாறைகள் சூழ்ந்த  பகுதியில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு காரும் மினி பஸ்சும் சிக்கி, புதையுண்டது.

இடிபாடுகளில் சிக்கி இந்த வாகனங்களில் சென்ற ஒரு பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #Kishtwarlandslide

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com