வைத்திகுப்பத்தில் மது கிடைக்காத விரக்தியில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை

வைத்திகுப்பத்தில் மது கிடைக்காத விரக்தியில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை வைத்திகுப்பம் பச்சைவாழியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மலையாளத்தான் (வயது65). மீனவர். இவருக்கு தையல் நாயகி என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது.

மலையாளத்தானுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மலையாளத்தான் மது குடிக்க முடியாமல் திண்டாடி வந்தார்.

இதனால் மனமுடைந்த மலையாளத்தான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டின் குளியல் அறையில் அவர் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். உடனடியாக மலையாளத்தானை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மலையாளத்தான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com