விழுப்புரத்தில் நள்ளிரவு டெய்லர் கடையில் தீ விபத்து - ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

விழுப்புரத்தில் நள்ளிரவு டெய்லர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
விழுப்புரத்தில் நள்ளிரவு டெய்லர் கடையில் தீ விபத்து - ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சுதாகர் நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு குமார் (வயது 45) என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை யொட்டி இவரது கடைக்கு புதிய துணிகளை தைக்க ஏராளமானவர்கள் கொடுத்திருந்தனர்.

நேற்று இரவு 12 மணி அளவில் குமார் தைத்த துணிகளை அயன் பாக்ஸ் மூலம் தேய்த்து கொண்டிருந்தார். துணிகளை தேய்த்து முடித்த அவர் அயன் பாக்சை ஆப் செய்யாமல் அப்படியே வைத்து விட்டு கடையை பூட்டி கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் அந்த அயன்பாக்ஸ் சூடேறி அருகில் இருந்த துணிகளில் தீப்பிடித்தது. பின்னர் மளமளவென்று தீப்பிடித்தது.

டெய்லர் கடையில் இருந்து புகை வெளியே வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் விழுப்புரம் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் ஜெயகணேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் டெய்லர் கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

மற்றொரு சம்பவம்...

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரே தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று இரவு 8.30 மணிக்கு மீட்டர் பாக்சில் திடீரென்று தீப்பிடித்தது.

இதையறிந்ததும் அங்கிருந்த ஊழியர் செல்வராஜ் என்பவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com