

8 அணிகள் பங்கேற்ற 2-வது உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்தது. இதில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 16-வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.
இதில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்க அணி தடுமாறியது. 2-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் வருண்குமார் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தார். இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் 11-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தியும், 25-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தியும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.