தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை விரைவில் கிடைக்கும் என்று நாடாளு மன்றத்தில் மத்திய மந்திரி அல்போன்ஸ் தெரிவித்தார். #KJAlphons #HelicopterTourism #Tamilnadu
தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி:

சுற்றுலா பயணிகளை ஊக்கும்விக்கும் வகையில் மத்திய அரசு ‘பவான் ஹன்ஸ் லிமிடெட்’ என்னும் ஹெலிகாப்டர் சேவையை நடத்தி வருகிறது. இத்தகைய சேவை ஏற்கனவே இமாசலபிரதேசம், சிக்கிம், டையு மற்றும் டாமன், அந்தமான் மற்றும் நிகோபார் மற்றும் அசாம் மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கான இந்த ஹெலிகாப்டர் சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் இச்சேவையை தொடங் குவது குறித்த சாத்தியக் கூறு ஆய்வு ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கூறியதாவது:-

மத்திய அரசு நிறுவனமான பவான் ஹன்ஸ் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொண்டது.

சுற்றுலா பயணிகளுக்கான இந்த சேவையை குறிப்பாக மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடங்குவது குறித்த வாய்ப்புகள் இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முதல் கட்ட அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்துக்கு விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #KJAlphons #HelicopterTourism #Tamilnadu #tamilnews 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com