ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - பா.ஜ.க. பெண் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. பெண் வேட்பாளர் சோபா சவுகானுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ElectionCommission #BJPNominee #ChildMarriage
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - பா.ஜ.க. பெண் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பாலி மாவட்டத்துக்கு உட்பட்ட சோஜத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் சோபா சவுகான்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது குழந்தை திருமணத்துக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. அதாவது தான் எம்.எல்.ஏ. ஆனால் ஒருபோதும் குழந்தை திருமணத்துக்கு தடையை ஏற்படுத்த மாட்டேன் என அவர் மக்களுக்கு உறுதி அளித்ததாக தெரிகிறது.

அவருடைய இந்த பேச்சு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் மாநில தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com