வாகன சோதனையின்போது போலீசார் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி - டிரைவர் கைது

மதுரையில் வாகன சோதனையின்போது லாரியை ஏற்றி போலீசாரை கொல்ல முயன்றதாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனையின்போது போலீசார் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி - டிரைவர் கைது
Published on

மதுரை:

மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர்கள் தினேஷ், மரியஅருண். இவர்கள் நேற்று மாலை மேலூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் லாரியை டிரைவர் மெதுவாக ஓட்டி வந்தார். உடனே போலீஸ்காரர்கள் லாரியின் முன் பகுதிக்கு சென்று விசாரிக்க முயன்றனர்.

இதையடுத்து திடீரென்று வேகத்தை அதிகரித்த டிரைவர், போலீஸ்காரர்கள் மீது லாரியை ஏற்றிக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ்காரர் தினேஷ் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிலைமானை சேர்ந்த பெரியசாமி (44) என்பவரை கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com