

நெல்லை மாவட்ட மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 22-ந் தேதி போராட்டம் நடந்தது. இதில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் 13 பேர் பலியானார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏராளமானோர் கைதாகி உள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தை விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது.
மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.