சொந்த மண்ணில் உள்ள ‘பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுங்கள்’ - பாகிஸ்தானுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பதை நாம் பார்க்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்
சொந்த மண்ணில் உள்ள ‘பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுங்கள்’ - பாகிஸ்தானுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். நாட்டின் பாதுகாப்பை முன்நிறுத்தி பல்வேறு திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் நாட்டின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டார். இந்த புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையின் முக்கிய அம்சம், பாகிஸ்தானுக்கு அதனுடைய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு அழுத்தம் தருவது ஆகும்.

புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட பின் டிரம்ப் பேசுகையில், “பாகிஸ்தானுடான நட்புறவை நாம் தொடர விரும்புகிறோம் என்பதை அந்நாட்டிற்கு தெளிவுபடுத்த வேண்டும். பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பதை நாம் பார்க்க வேண்டும். நாம் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய தொகையை அந்நாட்டிற்கு வழங்கி வருகிறோம். அது பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க பயன்படும்” என கூறினார்.

மேலும் கூறுகையில், “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பாகிஸ்தானுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் தருவோம். ஏனென்றால் ஒரு நாடு, தனது கூட்டாளி நாட்டின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அந்த இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு நீடிக்காது” என தெரிவித்தார். னாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். நாட்டின் பாதுகாப்பை முன்நிறுத்தி பல்வேறு திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். நாட்டின் பாதுகாப்பை முன்நிறுத்தி பல்வேறு திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் நாட்டின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டார். இந்த புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையின் முக்கிய அம்சம், பாகிஸ்தானுக்கு அதனுடைய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு அழுத்தம் தருவது ஆகும்.

புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட பின் டிரம்ப் பேசுகையில், “பாகிஸ்தானுடான நட்புறவை நாம் தொடர விரும்புகிறோம் என்பதை அந்நாட்டிற்கு தெளிவுபடுத்த வேண்டும். பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பதை நாம் பார்க்க வேண்டும். நாம் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய தொகையை அந்நாட்டிற்கு வழங்கி வருகிறோம். அது பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க பயன்படும்” என கூறினார்.

மேலும் கூறுகையில், “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பாகிஸ்தானுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் தருவோம். ஏனென்றால் ஒரு நாடு, தனது கூட்டாளி நாட்டின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அந்த இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு நீடிக்காது” என தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் நாட்டின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டார். இந்த புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையின் முக்கிய அம்சம், பாகிஸ்தானுக்கு அதனுடைய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு அழுத்தம் தருவது ஆகும்.

புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட பின் டிரம்ப் பேசுகையில், “பாகிஸ்தானுடான நட்புறவை நாம் தொடர விரும்புகிறோம் என்பதை அந்நாட்டிற்கு தெளிவுபடுத்த வேண்டும். பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பதை நாம் பார்க்க வேண்டும். நாம் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய தொகையை அந்நாட்டிற்கு வழங்கி வருகிறோம். அது பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க பயன்படும்” என கூறினார்.

மேலும் கூறுகையில், “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பாகிஸ்தானுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் தருவோம். ஏனென்றால் ஒரு நாடு, தனது கூட்டாளி நாட்டின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அந்த இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு நீடிக்காது” என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com