

இந்த போட்டியை அடிலெய்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதல்முதலாக நடத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா செல்லும் அணிகள் ஒரு போட்டியை பிங்க் பாலில் விளையாடும்படி ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டது.
அதன்படி ஆஸ்திரேலியா செல்லும் அணிகள் பிங்க் பால் டெஸ்டில் விளையாடுகிறது. ஆனால் கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றபோது பிங்க் பால் டெஸ்டில் விளையாட மறுத்தது.
இந்தியா பிங்க் பால் டெஸ்டில் விளையாட தயங்குகிறது. விராட் கோலி எதையும் எளிதாக எதிர்கொள்ளக்கூடிய கேப்டன். இதனால் இந்த வருடம் இறுதியில் நடைபெறும் தொடரின்போது பிங்க் பால் டெஸ்டில் விளையாட இந்தியா சம்மதிக்கும் என ஆஸ்திரேலியா நம்புகிறது.
அதேவேளையில் இந்தியா பிங்க் பால் டெஸ்டில் விளையாடாமல் இருந்தது. முதன்முதலாக இந்தியா கொல்கத்தாவில் வங்காளதேச அணியை எதிர்த்து பிங்க் பாலில் விளையாடியது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை தூண்டும் வகையில் பேசிக் கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கும் நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டியளித்தார். அப்போது பிங்க் பால் டெஸ்டிற்கு தயார் என்று கம்பீரமாக சவால் விட்டார்.