ஆளுநருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை சந்திப்பு: சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தல்
முதலமைச்சருக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்துள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை காலை ஆளுநரை சந்தித்து சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்த உள்ளனர்.
அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாகவும் கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.